இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல்மென்டிஸ் களத்தடுப்பு பயிற்சியின் போது காட்டிய உத்வேகத்தை அடிபடையாக வைத்தே அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க முன்வந்ததாக அணித்தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய குசல்மென்டிஸ் நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
குசால் மென்டிஸ் ஆறு சிக்சர்களையும் அடித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திமல் களத்தடுப்பு பயிற்சிகளின் போது குசல் மென்டிஸ் வெளிப்படுத்திய தீவிரத்தை கருத்தில்கொண்டே நாங்கள் அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க முன்வந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் களத்தடுப்பில் மிகச்சிறந்த மனோநிலையை வெளிப்படுத்தினார் என தெரிவித்துள்ள தினேஸ் சந்திமல் குசால் மென்டிஸ் போன்ற வீரர்ஒருவரால் வெகுவிரைவிலேயே பழைய சிறப்பான நிலைக்கு மீள திரும்பமுடியும் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குசால்மென்டிஸ் எவ்வளவு சிறந்த வீரர் என்பது எங்களிற்கு தெரியும் அவர் எங்களின் எதிர்காலம் என தெரிவித்துள்ள சந்திமல் அவர் அந்த பொறுப்பை ஏற்று மிகச்சிறப்பாக விளையாடினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடவுள்ள மூன்று துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடியமை குறித்தும் சந்திமல் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM