வீரகெட்டிய, மக்குனதெனிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டு சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேத்தேவத்தகொட ஹிபுத்த, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வன்னியராச்சிலாகே ருவன் நாலக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பிலான உடற்கூறு பரிசோதனை நேற்று இடம் பெற்றுள்ளது உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்படைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிணக்கின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகுலதெனிய ஹகுரவெல பிரதேசத்தினை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மேற்படி நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM