துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

Published By: Vishnu

24 Oct, 2018 | 02:18 PM
image

வீரகெட்டிய, மக்குனதெனிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிக் சூட்டு சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மேத்தேவத்தகொட ஹிபுத்த, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வன்னியராச்சிலாகே ருவன் நாலக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

மரணம் தொடர்பிலான உடற்கூறு பரிசோதனை நேற்று இடம் பெற்றுள்ளது உயிரிழந்தவரின் சடலம்  வீரகெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்படைய  சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிணக்கின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகுலதெனிய ஹகுரவெல பிரதேசத்தினை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மேற்படி நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22