இந்தியா, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டின மீனவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்திரவிட்டுள்ளார்.
நேற்று காலை தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களை நெடுந்தீவிற்கு 30 நாட்டிக்கல் தூரத்தில் வைத்து இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்து ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த 5 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM