இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்கவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்க நேற்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்திருந்தது.
கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான நிதியை தனிப்பட்ட ஒருவரின் கணக்குக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த ஒளிபரப்பு நிறுவனத்தினால் வழங்கப்படவிருந்த 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையே இப்படி தனிப்பட்ட கணக்குக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்று அவரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM