திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவி அவரது காதலனால் ஏமாற்றப்பட்டு கொலை செய்து ஏரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட மாணவியின் காதலனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்ஷானி காணாமல்போன நிலையில் அவரது உடல் எச்சங்கள் எரிக்கப்பட்ட நிலையில் காட்டுப் பகுதியில் நீர் குட்டையொன்றில் இருந்து மீட்கப்பட்டது.
இதனையடுத்து இதில் கொலைசெய்யப்பட்ட மாணவியான டில்ஷானியின் காதலன் நிஷாந் ஜயாத் முதலாம் சந்தேகநபராகவும் மற்றும் அவரது நண்பர் இசுருறு சம்பத் சில்வா இரண்டாவது சந்தேகநபராகவும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் எதிரினா வழக்கு விசாரணையானது திருகோணமலை மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் நீதிபதி தீர்பளித்துள்ளார்.
இவ் வழக்கில் இரண்டாம் எதிரி குறித்த கொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாகவோ அல்லது பொது எண்ணத்துடன் கொலை புரிந்தாகவோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்ததாகவோ வழக்குத் தொடுநர் தரப்பானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் எண்பிக்க தவறியை குறிப்பிட்ட மன்று இரண்டாம் எரியை விடுதலை செய்தார்.
மேலும் கொல்லப்பட்ட மூன்று மாத கர்ப்பினியான அம் மாணவியின் காதலானான முதலாம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்கள் சான்றுகளின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கு தொடுநர் எண்பித்துள்ளதாக குறிப்பிட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM