பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை: நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு

Published By: MD.Lucias

17 Mar, 2016 | 08:45 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும்  பொட்டு அம்மான் உள்­ளிட்ட  சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது  நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச் சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த ­தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். 

அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.   பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்று நான் நினைக்­கின்றேன் என்று  முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா  தெரி­வித்தார்.

 பிர­பா­க­ரனை கொழும்­புக்கு அழைத்து வந்­தி­ருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்­ம­னையில் வைத்­தி­ருந்­ததைப் போன்று அவ­ரையும் பாது­காப்­பாக வைத்­தி­ருந்­தி­ருப்­பார்கள். அத்­துடன் அவ­ருக்கு வட­கி­ழக்கு முத­ல­மைச்சர் பதவியும் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதில் எனக்கு எந்த சந்­தே­க­மு­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

இலங்கை மன்றக் கல்­லூ­ரியல் இன்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் பொன்­சேகா கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

 யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்­தவின் பிள்­ளைகள் சுக­போ­க­மாக காலத்தை கழித்­தார்கள். காலை­முதல் மாலை­வரை ரகர் விளை­யா­டினர். போட்­டியில் தோல்­வி­ய­டை­யும்­போது நடு­வர்­களை தாக்­கினர். ரசி­கர்­களை தாக்­கினர்.  இது­தானா அபி­வி­ருத்­தியின் பிர­தி­ப­பலன்?

கடந்த அர­சாங்­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. வெ ளிப்­ப­டுத்­தினால் தொழில் அற்­றுப்­போகும். அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களை பலாத்­கா­ர­மாக தங்கள் பக்கம் இழுத்­துக்­கொண்­டார்கள். 

ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்கம் தொடர்பில் உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்­தினால் அவர்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை செய­லி­ழக்­கச்­செய்­வ­தாக பகி­ரங்­க­மாக தெரி­வித்­தனர். 

நாட்டின் சட்­டத்தை கையி­லெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தனர். நாட்டில் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தார்கள்  விரும்­பி­ய­வர்­களை விடு­வித்­தார்கள்.

அதே­போன்று நீதி­மன்­றங்­க­ளுக்கு தனக்கு தேவை­யா­ன­வர்­களை நிய­மித்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக செற்­பட்­ட­வர்­களை பதவி நீக்­கி­னார்கள்.  முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு   என்ன நடந்­தது என்ற முழு­நாட்­டுக்கும் தெரியும் . இவ்­வாறு தான் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார். மக்கள் பீதியில்  வாழ்ந்­தனர். அன்­றி­ருந்த பயம் இன்று இருக்­கின்­றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்­தி­யா­சத்தை நாட்­டுக்கு கொண்­டு­வந்தோம்.  நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்­தி­ரத்தை மீண்டும் இழக்க ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58