சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கஷோக்கி துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்திற்குள் பிரவேசித்தவேளை காணாமல் போயிருந்த நிலையில் அவர் அந்தத் தூதரகத்திற்குள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் தம்மிடமுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் ஏற்கனவே உரிமை கோரியிருந்ததுடன், சவூதி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தவரான கஷோக்கி தூதரகத்திற்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் துண்டுகளாக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் துருக்கி தெரிவித்திருந்தது.
இதேவேளை கஷோக்கி இறந்தமை தொடர்பில் சவூதி அரேபியா முதல் தடவையாக கடந்த வெள்ளிக்கிழமை, துருக்கிய இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் இடம்பெற்ற கைகலப்பொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக சவூதி கூறுயுள்ளது.
இந் நிலையில் இது தொடர்பாக துக்கி நாட்டின் ஆளும் கட்சியின் செய்தியாளர் ஒமர் செலீக் கூறுகையில்,
இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான முறையில் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செயல்.
அந்த உண்மையை மூடி மறைப்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை வெறும் யூகமாகவே வைத்திருக்க துருக்கியால் முடியாது. கசோக்கி படுகொலை விவகாரத்தில் சவூதி அரேபியாவுடன் நாங்கள் சமரசம் செய்து கொண்டால், அது நீதிக்குப் புறம்பானது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM