அக்குறணையில் வாகனத்தால் மோதுண்டு மரணித்தவரின் சடலத்தை அடையாளம் காட்ட உதவும் படி பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்குறணை ஏழாம் கட்டை பிரதேசத்தில் நீரெல்லை சந்தியில் கடந்த 18 ம் திகதி வேன் ஒன்றில் மோதப்பட்டு கடும் காயங்களுக்குள்ளாகிய ஒருவர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைபெற்று வருகையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனவும் 5 அடி இரண்டு அங்குலம் உயரத்தை கொண்டவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலை முடியை கட்டையாக வெட்டப்பட்ட நிலையில் இவர் கறுப்பு நிற டீ சேஷர்ட் ஒன்றும் கபில நிற சாரம் ஒன்றும் அணிந்திருந்துள்ளதுடன் வெள்ளை நிற காட் சட்டை ஒன்றை உள்ளடையாக அணிந்திருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவரை அடையாளம் காண்பதற்கு உதவுமாரு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவரது உறவினர்கள் அல்லது இவரை அடையாலம் காட்டக் கூடிய எவரேனும் இருப்பின் அலவத்துகொடை பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாரு தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM