ஜனாதிபதி கொலை சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜையிடம் விசாரணை

Published By: Vishnu

23 Oct, 2018 | 08:16 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கர வாத தடைச் சடத்தின் கீழ் இன்றைய தினம் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளார்.

கொலைச் சதி  விவ­காரம் குறித்து  பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள  பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­விடம்  நேற்று மூன்­றா­வது நாளாக 10 மணி நேர விசா­ரணை நடத்­தப்­பட்­டது.  

 கடந்த வாரத்தின் வியா­ழ­னன்று 9 மணி நேரமும், வெள்­ளி­யன்று 10 மணி நேர­மு­மாக 19 மணி நேரம் இது குறித்து விசா­ரிக்­கப்­பட்­டுள்ள  நாலக டி சில்­வா­விடம்  நேற்று காலை 9.15 முதல் இரவு 7.15 வரை விஷேட விசா­ர­ணைகள்   நடத்­தப்­பட்­டன.  

நேற்றும் அவ­ரிடம் விசா­ர­ணை­களை முழுமைப் படுத்த முடி­யாமல் போன­தாக கூறிய பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­செ­கர, இன்­னு­மொரு நாள் எஞ்­சிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அவரை அழைப்­பது என விசா­ர­ணை­யா­ளர்கள் தீர்மானித்துள்ளார்.

  இத­னி­டையே இன்­றைய தினம் இந்த கொலை சதி விவ­கா­ரத்தில், சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய பிர­ஜை­யான மேர்­சலி தோமஸ் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ்  தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும் நிலையில், அவர் கோட்டை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்படவுள்ளார். 

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் ஆஜர்ச் செய்யப்படவுள்ள நிலையில்,   இடம்பெறும் விஷேட விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32