20 கிலோமீற்றர் தூரத்திற்கு அனுப்ப முடியுமென எதிர்பார்க்கப்படும் ரொக்கட் ஒன்றினை நிர்மாணித்த கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலத்தின் மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சியின் எதிர்கால நிர்மாணப் பணிகளுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பத்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பினை இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இந்த ரொக்கட்டினை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அம்மாணவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி அந்த ரொக்கட்டினை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவினை பெற்றுத்தருவதாகவும் அதனை வானில் பறக்கவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய, அதன் மேலதிக நிர்மாணப் பணிகளுக்காக முதற்கட்டமாகவே இந்த பத்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை விமானப் படையின் தொழிநுட்ப அதிகாரிகள் இதன்போது அழைக்கப்பட்டிருந்ததுடன், ரொக்கட்டினை வானில் பறக்கவிடுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை மாணவன் கிஹான் ஹெட்டியாரச்சிக்கு பெற்றுக்கொடுக்குமாறு அவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM