(நா.தினுஷா)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பின் போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதியினை கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுகத்தில் ஒரு பகுதியும் அப்பாந்தோட்டை துறைமகமும் சீனாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதியினை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே தான் இது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா ஆர்வமாக உள்ளது. இதனை பிரதமர் ரணில் விகரமசிங்கவிற்கு இந்திய தலைவர்கள் தெளிவுப்படுத்தினார்கள் . இது குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM