முயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்

Published By: Digital Desk 4

22 Oct, 2018 | 06:08 PM
image

இரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி எத்தோய டயஸ் தோட்டத்தில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் மரத் துப்பாக்கியால் முயல் ஒன்றை வேட்டையாடுவதற்காக இலக்குவைத்தபோது, குறித்த இலக்கு வீட்டில் இருந்து வெளியெ சென்ற பெண் மீது பட்டதில் அவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22-10-2018) காலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி டயஸ் தோட்டத்தில் வசிக்கும் பீ.ஏ.பத்மினி சந்திரலதா வயது 56 என்ற பெண்ணே இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட முயல் மற்றும் மரத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இச் சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51