இரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி எத்தோய டயஸ் தோட்டத்தில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் மரத் துப்பாக்கியால் முயல் ஒன்றை வேட்டையாடுவதற்காக இலக்குவைத்தபோது, குறித்த இலக்கு வீட்டில் இருந்து வெளியெ சென்ற பெண் மீது பட்டதில் அவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (22-10-2018) காலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி டயஸ் தோட்டத்தில் வசிக்கும் பீ.ஏ.பத்மினி சந்திரலதா வயது 56 என்ற பெண்ணே இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்ட முயல் மற்றும் மரத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM