இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இந்திய பிரதமர் நரேந்நிர மோடியை சந்தித்து இலங்கை கிரிக்கெட்டின் நிலை பற்றி விபரித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,
'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கிரிக்கெட் தொடர்பாக பல விடையங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
குறிப்பாக இந்திய சி.பி.ஐ விசாரணைகளை மேற்கொண்டு பல கிரிக்கெட் சூதாட்டங்களை நிறுத்தியுள்ளதோடு அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் அது தொடர்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நாம் பாரதப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவர் உடனே மூத்த அமைச்சர் அருன் ஜெட்லியிடம் தொடர்பை மேற்கொண்டு கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிரதிபலிப்பாக இந்தியா எமது நாட்டுக்கு கிரிக்கெட் ஊழலை தடுப்பது தொடர்பான அறிவு மற்றும் தகவலை வழங்குவதாக தெவிரித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையே குறை கூறுகின்றனர். ஆனால் வீரர்களை விட சூதாட்ட காரர்களுக்கே முழுப்பொறுப்புண்டு. நாம் இந்த கிரிக்கெட்டின் கீழ் நிலைக்கு பின்னால் இருப்பவர்களையே கண்டுபிடிக்க வேண்டும்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM