கூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

Published By: Digital Desk 4

22 Oct, 2018 | 12:58 PM
image

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் 50 சிறைக்கைதிகள் ஈடுபட்டனர்.

பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அவர்கள் சிறைச்சாலையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதுடன், வெளிப்பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டமானது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28