(இரோஷா வேலு)
கொழும்பின் இருவேறு பகுதிகளில் நேற்று 268 கிராமுக்கும் அதிகமான நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றுக்கருகில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய லியனதுரு லக்மால் தில்ருக்ஷ என்பவரே இவ்வாறு 250 கிராம் 560 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார்.
நேற்று கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மட்டக்குளிய பொலிஸார் அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இன்னுமொருவர் நேற்று காலை 11 மணியளவில் மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து விசேட அதிரடி படையின் தலைமைக்காரியாலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் மொரட்டுவ உயன வீதி லுனாவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மொறட்டுவையைச் சேர்ந்த 30 வயதுடைய கல்வ நிரஞ்சன் என்பவரே இவ்வாறு 18 கிராம் 150 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM