கிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள லான்டூன் நிலக்கரி சுரங்கத்திலேயே நேற்றுமுன்தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் இரவு 334 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுரங்கத்தினுள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும் சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக் கொண்டனர். இவ்வாறு சிக்கிக்கொண்ட 22 பேருள் 2 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவரை காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 18 பேரையும் மீட்கும் பணிகளில் 140 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM