100 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 08:12 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை பெல்டன் பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தலவாக்கலை  - டயகம பிரதான வீதியின் லிந்துல வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயம் அடைந்த நிலையில் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்துள்ள மூவரும் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தமது வேலையை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதனையடுத்து  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21