மஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது - ரில்வின் சில்வா

Published By: Vishnu

21 Oct, 2018 | 04:55 PM
image

(எம்.மனோசித்ரா)

ரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம்  அவ்வழிமுறையினை வினவும்போது அவர்கள் பிறிதொருவரை சுட்டிக்காட்டும் அளவிற்கு அவர்களது பொருளாதார நிபுணத்துவம் காணப்படுகிறது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இவர்களிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்பிற்குரியது என குறிப்பிட்டார்.

இடைக்கால அரசாங்கம், ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பொது வேட்பாளர் என தற்போது எமது நாட்டு அரசியலில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. ஆட்சியாளர்கள் அனைவரும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு தத்தமது தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதனையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர்.

மேலும் அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மைத்திரி - மஹிந்த ஆகிய இருவரையும் இணைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஏதேனும் பெற்றுக் கொள்ளலாம் என  எண்ணிக் கொண்டிருக்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்

ஜே.வி.பி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36