பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இன்று காலை பதுளை நுழைவாயிலில் ஹாலி - எல என்ற இடத்தில் பாரிய வீதி மறியல் போராட்டமும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நடைபெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தொழிலாளர்களோடு தொழிலாளியாக வீதியில் அமர்ந்து ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அத்தோடு மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் “கம்பனிக்கு கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்திற்கு பாரம் கொடு” ,“தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா கொடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM