இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதி முயற்சியில் ரோ ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாகயிருக்கலாம் என இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி எகனமிக் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளே காரணமாகயிருக்கலாம் என எகனமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இடையில் உள்ள நல்லுறவை குழப்பும் முயற்சியாகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இரு அரசாங்கங்களிற்கும் இடையிலான உறவு எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றது என்பதே மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையை சாத்தியமாக்கும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சிறிசேன- ரோ குற்றச்சாட்டு குறித்த வதந்தியை பரப்பியிருக்கலாம் என இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை இந்தியாவிற்கு இடையில் நல்லுறவை விரும்பாத சக்திகளிடமிருந்தே இந்த வதந்தி உருவாகியிருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பிரதமர் இ;ந்திய பிரதமரையும் பாதுகாப்பு வட்டாரங்களை சேர்ந்தவர்களையும் சந்திக்கும்போது இந்த விடயம் பிரதானமாக ஆராயப்படும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கு இலங்கை பிரதமர் விஜயம் மேற்கொள்ளும்போது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என முதலில் திட்டமிடப்பட்டிருக்கவில்லை எனினும் ரோ குறித்த குற்றச்சாட்டுகளிற்கு பின்னர் அவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM