ஆறாவது இருபது-20 உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் ஒவ்வொரும் நாளும் போட்டிகளின் போது ஒரு விநோத நிகழ்வு பதிவாகின்றது.
அந்த வகையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்யமான நிகழ்வொன்று இடம்பெற்றது.
அதாவது அப்ரிடி வீசிய 7ஆவது ஓவரில் 2 ஆவது பந்தை எதிர்கொண்ட சகிப் அல் அசேன் ஓட்டம் ஒன்றை பெறுவதற்காக ஓட முற்பட்ட போது அவருடைய காலணி கழண்டு விழுந்துள்ளது.
இதை அப்ரிடி எடுத்து வந்து மீண்டும் அசேனிடம் கொடுத்தார்.
அப்ரிடி அணித் தலைவராக இருக்கின்ற போது இவ்வாறு எதிரணி வீரர் ஒருவரின் காலணியை கையில் எடுத்து, அவர் இருந்து இடத்திற்கு சென்று கொடுத்துள்ளமையானது அவரின் பணிவு தன்மையை எடுத்து காட்டுகின்றது.
இது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் சமூகவலைத்தளங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த காணொளி உங்களுக்காக,
சூப்பர்-10 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குழு 1இல் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நடப்பு சாம்பியன் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளும், குழு 2இல் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
சூப்பர்-10 சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM