(ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கும் வாய்ப்பில்லை அது ஒரு கற்பனை கதையாகும் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,
கேள்வி : ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்து தகவல் வெளியிட்ட உளவாளி எனக் கூறப்படுகின்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கவுள்ளதாக கூறியிருந்தார். அது உண்மையா?
பதில் : அதுவொரு கற்பனை கதையாகும். அவ்வாறு நடப்பதற்கான சாத்தியம் இல்லை.
கேள்வி : எனினும் அது பொய் எனின் தகவல் வெ ளியிட்டவர் கூறிய தகவலை எவ்வாறு நம்ப முடியும்?
பதில் : அவர் ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சி தொடர்பில் தகவல் வெ ளியிடும்போது இதனை ஒரு காரணியாகவே முன்வைக்கின்றார். அவர் கூறிய கொலை முயற்சி குறித்தே விசாரிக்கவேண்டும்
கேள்வி : எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கும் சாத்தியம் உள்ளதா-?
பதில் : அவ்வாறு நடக்காது. அது கற்பனை விடயமாகும். எங்களுக்கு தெரியும். அவ்வாறு எந்த அறிகுறியும் இல்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM