ஊடகவியலாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகின்ற நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளமை தற்கோர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் ஜமால், அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதிவந்துள்ளார்.
இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டு ஜமாலை சவுதி அரசாங்கம் தான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் காணொளி மற்றும் ஓடியோ ஆதாரத்தையும் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார். சவுதியை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடுமையாக விமர்சித்துள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தது.
ஜமால் விவாகாரம் தொடர்பாக சவுதி அரசரிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
மேலும், சவுதி மன்னரை சந்திக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை ட்ரம்ப் அனுப்பி வைத்தார். இதனால் சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. கோபத்தை தணிக்கும் முயற்சியாக பாம்பியோ சவுதி அரேபியா சென்று பேச்சுவார்த்தை நடததினார்.
அதேசமயத்தில் அமெரிக்காவின் கோபத்தை தணிக்கும் பொருட்டு அந்நாட்டுக்கு சுமார் 700 கோடி ரூபாயை சவுதி அரேபியா உதவி நிதியாக அளித்துள்ளது. பாம்பியோ ரியாத் சென்ற சந்தர்ப்பத்தில், சவுதி அரேபியாவால், அமெரிக்காவுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பத்திரிகையாளர் ஜமால் படுகொலையில் ட்ரம்ப் உறுதியாக இல்லாமல், சவுதி அரேபியாவிடம் பணம் பெறும் நேரம் இதுதானா? என அந்த பத்திரிக்கைகள் கேள்வி தற்போது எழுப்பியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. சவுதி பணம் அனுப்பியதற்கும், பாம்பியோ அங்கு சென்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரியிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM