இரோஷா வேலு)
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான விசேட திட்டம் தொடர்பிலும் அரசாங்கத்துடன் தாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக சட்டஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளை, கொலை மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்கள் கடந்த மூன்று வருடக் காலப்பகுதியில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினரை கெளரவப்படுத்த நாம் கடமைபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
மேல்மாகாண அழகியற் கலையரங்கத்தில் இன்று இடம்பெற்ற திறமையான வெளிப்படுத்தல்களை கொண்ட பொலிஸாருக்கு பொலிஸ்மா அதிபரின் நிதியத்தினால் வழங்கப்படும் பணப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஏனைய ஊழியர்கள் போல் 8 மணிநேரம் மாத்திரம் கடமையாற்றுவோரல்ல பொலிஸார். இவர்கள் 24 மணிநேரம் கடமையாற்றினாலேயே நாட்டின் சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படுவதோடு சமாதானமும் சுதந்திரமும் நிலைப்படுத்தப்படும். இதுவே பிரஜைகள் சுதந்தரமாக வாழ கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
இவ்வாறானவர்கள் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள் ஊடகங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுவதோடு நின்று விடாமல் பொலிஸாரின் திறமைகள் குறித்த கெளரவத்தையும் பெற்றுக்கொடுத்திட முன்வர வேண்டும். என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM