(எம்.ஆர்.எம்.வஸீம்)
அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தெரிவித்தவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.இந்த செயலானது வெட்கப்படவேண்டிய விடயம் எனபதுடன் மிகவும் பயங்கரமான விடயமாகும். அத்துடன் இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் இருந்துவரும் நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடகப்பேச்சாளரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இந்திய புலனாய்வு அமைப்பு தன்னை கொலைசெய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின்போது தெரிவித்ததாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் இந்த தகவல்களை அமைச்சரவையில் இருக்கும் 4 அமைச்சர்கள் குறிப்பிட்டதாகவே தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் இவ்வாறு தெரிவித்தவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்திருக்கவேண்டும். இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஆராயவும் எதிர்பார்க்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM