(நா.தனுஜா)
சக்திவலுவின் செயற்றிறனை மேலும் விரிவாக்கல் மற்றும் முதலீட்டு திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் மூலம் சக்திவலு உற்பத்தித்திட்டம், சக்திவலு சேமிப்பு, சக்தியின் செயற்றிறன் அதிகரிப்பு என்பன தொடர்பில் இருதரப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்தி, அதனூடாக பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு என்பவற்றை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் முகவர் நிலையம் 22 மில்லியன் யூரோ நிதியினை இத்திட்டத்தின் ஆரம்ப நடைமுறைகளை மேற்கொள்வதற்கென வழங்கியுள்ளது.
அத்துடன் இத் திட்டத்திற்கு 260 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முழுமையான செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஆசிய அபிவிருத்தி வங்கி 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவர் நிலையம் மேலும் 30 மில்லியன் யூரோ நிதியினைக் கடனாக வழங்கவுள்ளது
எஞ்சிய தொகை இலங்கை மின்சார சபையினால் முதலீடு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM