கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தமது சக மாணவியின் மரணச் சடங்கிற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் கொடுக்காதமையினைக் கண்டித்து கிழக்குப் பல்லைக் கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழக நிர்வாக கட்டடத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்ட மாணவர்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 15 ஆம் திகதி கிழக்குப் பல்லைக் கழகத்தின் கலை காலாசார பீட யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்த டனியல் சில்வேவியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.
குறித்த மாணவியின் மரண வீட்டிற்குச் செல்வதற்காக கலை காலாசார பீட மாணவர்கள் பீடாதிபதி ஊடாக செவ்வாய்கிழமை போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வெளிநாடு சென்றுள்ளதால் பிரதி உபவேந்தரிடம் குறித்த கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கையினை பல்கலைக் கழக நிர்ருவாகம் ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவித்திருந்தது.
நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டினைக் கண்டித்தும் வருங் காலங்களில் மாணவர்களைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற காரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு போரட்டம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM