(எம்.ஆர்.எம்.வஸீம்)
"நாடு கடந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் இந்தியாவின் 'ராே' அமைப்பு என்பற்றினால் வழி நடத்தப்பட்ட குழுவொன்றினாலே கொலை சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றாலும் அரசாங்கம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மெளனம் காப்பது சந்தேகத்தை எற்படுத்துகின்றது" என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கூட்டு எதிரணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
"சதித்திட்டம் தொடர்பில் இந்திய பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் ராே அமைப்பைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரியவந்தது. இவர் கைது செய்யப்டுவதற்கு முன்னர் என்னை சந்திப்பதற்கு இரண்டு முறை வந்துள்ளார். என்றாலும் அந்த நேரத்தில் நான் இருக்கவில்லை.
குறித்த நபர் தொடர்பில் நாங்கள் தேடிப்பார்த் தபோது ராே அமைப்பில் இவருக்கு இருக்கும் பெயர் அல்ல இலங்கைக்கு தெரிவித்துள்ள பெயர். இவரின் பெயர் ராஜேந்திர குமார். அத்துடன் ராே அமைப்பில் இருப்பவர்களுக்கு ஆள் அடையாள அட்டை ஒன்று வழங்கப்படுகின்றது. இதன் பிரகாரம் ராே அமைப்பு இவருக்கு வழங்கியிருக்கும் அடையாள அட்டை இலக்கமானது RB 317217-vj ஆகும்.
மேலும் குறித்த இந்திய பிரஜை 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியல் அடைக்கலம் தேடியவராகவே இலங்கைக்கு வந்துள்ளார். அவர் அன்று முதல் இன்றுவரை ராே புலனாய்வு அமைப்பில் பணி புரிந்துள்ளார். புலனாய்வு அமைப்பால் கிடைக்கப்பெற்ற பணத்திலே வாழ்ந்து வந்துள்ளார். அதனால்தான் அவர் கைதுசெய்யப்பட்டதுடன் குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இந்திய உயர் ஸ்தானிக காரியாலயம் அறிவித்தது.
எந்தவொரு நபரின் வாக்குமூலத்தை நிராகரிப்பதற்கு பயன்படுத்த கையாளப்படுவது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிப்பதாகும். அதனையே இந்திய உயர் ஸ்தானிக காரியாலயமும் செய்திருக்கின்றது."என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM