மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய வசீகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி ரெலிக்கோம் வீதியில் உள்ள சலூனில் கடமையற்றி வந்த குறித்த இளைஞர் சம்பவதினமான இன்று வழமைபோல கடையில் தனது வேலையைச் செய்துவந்துள்ள நிலையில் பகல் ஒரு மணியளவில் கடையின் பின்பகுதிக்கு சென்றவர் அதிகநேரமாகி திரும்பி வராததையிட்டு அங்கு சென்றபோது கடையின் கூரையில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் காதல் பிரச்சனை காரணமாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM