சர்வதேச கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது டொலரை தவித்து யூரோவை பயன்படுத்த வெனிசுலா தீர்மானித்துள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அரசாங்கம் மற்றும் அரச எண்ணெய் நிறுவனத்தின் புதிய கடன் மற்றும் பங்கு விற்பனைக்கு கடந்த வருடத்தில் அமெரிக்கா தடை விதித்ததுடன் வெனிசுலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டின் 13 சிரேஷ்ட அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
மேலும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களின் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படுவதோடு அவர்களுக்கு அமெரிக்காவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் வெனிசுவலாவின் பங்கு பரிமாற்ற நடவடிக்கையின்போது எதிர்காலத்தில் யூரோவை பயன்படுத்தவுள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானதும், சர்வதேசத்துக்கு எதிரானதுமாகும். இவ்வாறான நிலையில் அமெரிக்காவினால் வெனிசுலா மீது விதித்துள்ள பொருளாதா தடையின் காரணமாக டொலரினை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாது.
ஆகவே பொது மக்களின் கொள்வனவுக்கா 2 மில்லியன் யூரோக்களை அடுத்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் வெனிசுவலாவில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM