த.தே.ம.முன்னணின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்க  மறியல்

Published By: Digital Desk 4

16 Oct, 2018 | 08:35 PM
image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் பொலிஸார் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேரையும் காயமடைந்தவர்கள் தரப்பில் இரண்டு பேர் உட்பட ஆறு நபர்களை இன்று காலை கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் மாலை 5.00 மணியளவில் மல்லாகம்  நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தினர். 

இதன்போது வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் சட்டத்தரணிகளாக சுகாஸ், மணிவண்ணன், சுபாஸ், றோய் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரனும் ஆஜராகியிருந்தனர்.

 இதன்போது பிரதேச சபை உறுப்பினர் தலைப்பகுதியில் இரும்பு குழாயினால் தாக்கியுள்ளமையால் கொலை முயற்சி தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 300 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் மன்றில் விண்ணப்பம் செய்தார். 

இதன்போது இது தொடர்பாக ஆராயப்படும் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பு சட்டத்தரணிகளின் விவாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32