(இராஜதுரை ஹஷான்)
வீதிவிபத்துக்களின் மூலம் இடம் பெறுகின்ற உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்த போக்கிலே காணப்படுகின்றது. வீதி விதிமுறைகளை பின்பற்றாமையே விபத்துக்களுக்கான பிரதான காரணம் என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
வீதி விபத்துக்களை தடுக்க வேண்டுமாயின் நவீன உத்திகளை போக்குவரத்து துறையில் செயற்படுத்த வேண்டும்.இதற்கான செயற்திட்டங்கள் தற்போது நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உயிர்களை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவர் வீதமாவது வீதிவிபத்தினால் உயிரிழக்கின்றனர். இந்நிலைமை தொடர்ந்தே அதிகரித்ததாகவே காணப்படுகின்றதே தவிர குறைவடையவில்லை. 2012ம் ஆண்டு தெடக்கம் இன்று வரை வதிவிபத்தின் காரணமாக 18491பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாண்மையானோர் இளைஞர்கள். இந்த எண்ணிக்கையானது நாட்டின் சனதொகையில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது.
நடப்பாண்டில் ஜனவரி தொடக்கம் இன்று வரை 2500ற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களினால் மரணித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்ற காரணிகளினால் தற்போது நெடுஞசாலை விபத்துக்கள் சடுதியாக குறைவடைந்துள்ளது .
ஆனால் பெருந்தெருக்களில் வாகன சாரதிகளுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் மதுபாவனை போன்ற காரணிகளே பாரிய விபத்துக்களுக்கு காரணம் என கடந்த கால அறிக்கைகளில் வெளிவந்துள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM