இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தெரிவுக்குழுவின் தலைவருமான சனத்ஜெயசூரிய நான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் நடந்துகொண்டேன் என தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளின் கீழ் சனத்ஜெயசூரியவிற்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சனத்ஜெயசூரிய இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஐசிசி எனக்கு எதிராக ஆட்டநிர்ணய சதி தொடர்பான எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் விசாரரணைகளில் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நான் மேலதிகமாக எந்த கருத்துக்களையும் வெளியிடும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ள சனத்ஜெயசூரிய எனது குற்றச்சாட்டுகள் குறித்து எந்த வித கருத்துக்களையும் வெளியிடவேண்டும் என சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது அவ்வாறு கருத்துக்களை வெளியிட்டால் அது ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜெயசூரியவிடம் பல முறை பேச்சுவாhத்தைகளை மேற்கொண்ட பி;ன்னரே ஐசிசி இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியமாக சனத்ஜெயசூரியவின் கையடக்க தொலைபேசியே பிரச்சினையாகவுள்ளது அவர் அந்த கையடக்க தொலைபேசியை ஐசிசியினரிடம் ஒப்படைக்க மறுத்துள்ளார் அது குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனத்ஜெயசூரியவின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் அந்த கையடக்க தொலைபேசியில் உள்ளன அவற்றை ஐசிசி அதிகாரிகள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை அதன் காரணமாகவே அவர் அதை கையளிக்க மறுக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM