பத்திரிகையாளர் ஜமால்கசோஜி துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்திற்குள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதற்கு சவுதி அரேபியா தயாராகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகளின் போது இடம்பெற்ற தவறுகாரணமாகவே கசோஜி கொல்லப்பட்டார் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை சவுதிஅரேபியா தயாரித்து வருகின்றது.
பத்திரிகையாளருக்கு எதிரான நடவடிக்கை வெளிப்படை தன்மையற்ற விதத்தில் தெளிவற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்டது என சவுதி அரேபியா தெரிவிக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகள் இடம்பெறும் எனவும் சவுதிஅரேபியா உறுதியளிக்கவுள்ளது.
சவுதி அரேபிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால்கசோஜி துருக்கியில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளார் என சந்தேகம் எழுந்துள்ளதை தொடர்ந்து சவுதி அரேபியா மேற்குலகின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
பத்திரிகையாளர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதிஅரேபியாவில் நடைபெறும் சர்வதேச முதலீட்டு மாநாட்டை உலக நாடுகள் புறக்கணித்துள்ளன.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM