நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் வீதி சமிக்ஞை அருகில் இடம்பெற்றது.
வீதியை கடப்பதற்கு முயன்றபோது எதிரே வந்த லொறியில் மோதி தலையில் படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் மரணமடைந்தவராவார்.
நீர்கொழும்பு போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதேவேளை இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணை நடத்தினார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM