(இரோஷா வேலு)
சமூக வலைத்தளங்களினூடாக ஒன்று சேர்ந்த இளைஞர் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றின் இறுதியில் பிரதேசவாசிகளுடன் ஏற்பட்ட தகராரில் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 34 பேரில் இருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, துரேகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்படி களியாட்ட நிகழ்வானது கடந்த சனிக்கிழமை இரவு ஆரம்பமாகி நேற்று மாலை வரையில் தொடர்ந்துள்ளது.
இதில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் மதுபோதையில் வீடு திரும்புவதற்காக மோட்டார் வாகனமொன்றில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே அப்பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தையடுத்து முச்சக்கர வண்டி சாரதிக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட, களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மேலும் சிலரும் அப்பிரதேசத்திற்கு வந்து கூச்சலிடவே, அங்கு குழுமிய பிரதேசவாசிகளினால் குறித்த பகுதி கலவரமடைந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸாரினால் குறித்த களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 34 பேரும் விசாரணைக்களுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதில் 19 முதல் 30 வயதிற்கிடைப்பட்ட 22 ஆண்களும் 12 பெண்களுமே காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 34 பேரையும் சோதனையிட்ட வேளையில் அவர்களில் இருவர் போதைப்பொருள் தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட மற்றைய 32 பேரும் பொலிஸாரின் கடும் நிபந்தனையின் அடிப்படையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து கேரள கஞ்சா 4 கிராம் மற்றும் 530 கிராம் ஐஸ் மற்றும் மேலும் சில போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இருவரையும் இன்றைய தினம் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM