இந்தியா, வேலூர் மாவட்டம், மேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணமாகி 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கல்பனாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவலர் குமரேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ரமேஷ், கல்பனாவை விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து குமரேசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கல்பனா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
கல்பனாவும் மஞ்சும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். குமரேசன் சென்னையில் பொலிஸாக பணியாற்றி வருவதால் வாரத்தில் ஒரு முறை வாலாஜாப்பேட்டைக்கு வந்து கல்பனாவை சந்தித்து விட்டு செல்வது வழக்கம்.
குமரேசனுக்கு கல்பனாவை விட வயதில் சிறியவரான மஞ்சு மீது ஒரு கண் இருந்தது. அவரை எப்படியாயினும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். இந்த ஆசையை கல்பனாவிடம் சொன்னபோது மகள் உறவு கொண்ட பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பது என கேட்டு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் எப்போது ஊருக்கு வந்தாலும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு குமரேசன், கல்பனாவை தாக்குவது வாடிக்கையாகி இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த கல்பனா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று மஞ்சு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கல்பனா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார்.
தனது தாய் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும் மஞ்சு வாலாஜாப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM