பியகம மின் விநியோக நிலையத்தில் காணப்படும் மின்மாற்றியானது, சுமார் 30 வருடங்கள் பழைமை வாய்ந்ததென சுரேன் பட்டகொடவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று திடீரென இடம்பெற்ற மின்சாரத் தடை தொடர்பில்,மின்சார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொடவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கைச்சாத்துடன், ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றியை, முழுமையாக பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இது தொடர்பில், பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று, மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அந்த மின்மாற்றியை ஏன் முழுமையாக பழுதுபார்க்கவில்லை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே உள்ளது.
இவ்வாறு பழுதுபார்க்காமையே, அது வெடிப்புக்குள்ளாகக் காரணமாகியிருக்கலாம் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM