மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 106.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 367 ஓடத்தை பெற்று, 56 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியை இந்தியா வெற்றிகொண்ட நிலையில் இரண்டாவது போட்டி ஹைதராபத்தின் ரஜுவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவு அணியின் தலைவர் ஜோசன் ஹொல்டர் முதலில் துடுப்பெடுததாடுவதற்கு தீர்மானித்தார்.
அதன்படி மேற்கிந்தியத் தீவு முதல் நாள் ஆட்டம நேர முடிவின் போது 95 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ஓட்டத்துடனும், பிஷோ2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. 98 ஓட்டத்துடன் சதத்துக்காக காத்திருந்த ராஸ்டன் சதமடித்து, 106 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்ததுடுத்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 101.4 ஓவர்களுக்கு 311 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும் அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தனர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது.
அதன்படி இந்திய சார்பில் லோகேஷ் ராகுல் 4 ஓட்டத்துடனும், புஜாரா 10 ஓட்டத்துடனும், அணித் தலைவர் விராட் கோலி 45 ஓட்டத்துடனும் பிரித்வி ஷா 70 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, ரகானே 75 ஓட்டத்துடனும் ரிஷாத் பந்த 85 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந் நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 70 ஓட்டத்துடன் ரகானேயும், 75 ஓட்டத்துடன் ரிஷாத் பந்தும் சதத்துக்காக காத்திருந்து ஆட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் ரகானே 80 ஓட்டத்துடனும் ரிஷாத் பந்த் 92 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறி சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட்டனர்.
இவர்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்தியா அணி 106.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 367 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் மேற்கிந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அணித் தலைவர் ஹொல்டர் 5 விக்கெட்டுக்களையும், கப்ரில் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் ஜோமல் வார்டன் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 56 ஓட்டங்களில் முன்னிலையில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM