விளையாட்டின் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்திய நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அளவெட்டி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை விளையாட்டு தொடர்பில் இளைஞர் ஒருவருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து அங்கிருந்து சென்ற இளைஞன் பின்னர் வாளுடன் மைதானத்திற்குள் நுழைந்து தன்னுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதை அடுத்து அங்கிருந்த இளைஞர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து குறித்த இளைஞனை கைது செய்த தெல்லிப்பளை பொலிஸார் நேற்றைய தினம் மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து நீதிவான் குறித்த இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM