தனியார் மயமாக்கும்  சதித்திட்டமே மின்சார தடைக்கு  காரணம்

Published By: MD.Lucias

16 Mar, 2016 | 09:00 AM
image

மின் விநியோகத்தின் ஒருபகுதியை தனியார் மயமாக்கும்  அரசாங்கத்தின் சதித்திட்டமே நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள மின்சார தடையாகும் என லங்கா  சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பியகம உப மின்மாற்றியில் பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு நாடுமுழுவதும் மின்சாரம் தடைப்படும் எனவும்  அவர்  கேள்வியெழுப்பினார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.  

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பொதுவாக இலங்கையில்  நீர் மற்றும் அனல் மூலமே மின் உற்பத்தி  இடம்பெறுகின்றது. இந்நிலையில் இலங்கை மின்சார சபை மின் விநியோகம் தொடர்பில் தனியார் துறையினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பெரும்பாலான தனியார் துறையினர் எரிபொருள் மூலமே மின்விநியோகத்தை மேற்கொள்கின்றனர்.

தனியார் துறையினருடன் செய்துகொண்டுள்ள இந்த ஒப்பந்தம்மூலம் ஒரு அலகு மின்பாவனைக்கு 20ரூபா முதல் 70ரூபா வரை அறவிடப்படுகிறது. ஆனால் நீர் மூலம் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கு குறைந்த கட்டணமே பெறப்படும்.

மின் விநியோகம் தடைப்படும் காலங்களில் தனியார் துறையினரிடம் இருந்து கூடுதலான கட்டணத்துக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின் விநியோக தடையை சந்தர்ப்பமாக பயன் படுத்திக்கொண்டு  அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் கணனி மென்பொருள்  கலப்பு முறையொன்று பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2வருடங்கள் பாரிய மின் தடைகள் ஏற்படாத விதத்தில் மின் விநியோகத்தை மேற்கொள்ள முடியுமாக இருந்தது. இவ்வாறான நிலையில் கடந்த 6மாதங்களில் 3தடவைகள் மின் தடைகள் ஏற்பட்டும் அரசாங்கம் ஏன் இந்த முறையை பின்பற்றாமல் இருக்கின்றது என்பதுதான் எமக்கிருக்கின்ற கேள்வியாகும்.

கடந்த அரசாங்கம் மின்விநியோகம் தொடர்பாக ஆராய்வதற்கு நிறுவிய   மக்கள் பாவனை ஆணைக்குழுவே கணனி மென்பொருள் கலப்பு முறையிலான மின் விநியோகத்தை அங்கிகரித்தது. எனவே அரசாங்கம் இந்த ஆணைக்குழுவின் ஆலோசனையைப்பெற்று தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தடை குளறுபடியை நீக்க வேண்டும்.

அத்துடன் இந்த கணனி முறை ஆரம்பிக்க முன்பிருந்தே உப மின்மாற்றி ஒன்று பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட பகுதியிலேயே மின் விநியோகம் தடைப்படும். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம உப மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நாடுமுழுவதும் எவ்வாறு மின்தடை ஏற்பட்டது என்பதுதான் எமது  கேள்வியாகும்.

எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தடையானது தொழிநுட்ப கோளாறோ இல்லது இயந்திரங்களில் ஏற்பட்ட பாதிப்போ அல்ல. மாறாக அரசாங்கத்தின் செயற்திறமை இன்மையால் ஏற்பட்டதாகும். அத்துடன் மின் விநியோகத்தின் ஒருபகுதியை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் சதித்திட்டமுமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58