பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில் இன்று முற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்ட நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினருக்குச் சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கை விமானப்படையினரின் பெல் -212 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றும் தீயணைப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் விமானப்படையினரின் வாகனங்களும் குறித்த பகுதியில் சேவையிலீடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
3 மணிநேர தொடர்போராட்டத்தின் பின் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதேவைள, தீ பரவல் காரணமாக கொட்டாவ - பொரளை வரையான 174 ஆம் இலக்க பஸ் மார்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது
மேலதிக செய்திகளுக்கு ; பத்தரமுல்லையில் பாரிய தீ விபத்து
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM