சிவசக்தி ஆனந்தன் உரையை தடுக்க முயன்ற சுமந்திரன் - சபையில் பரபரப்பு

Published By: Rajeeban

11 Oct, 2018 | 02:34 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை தடுக்குமாறு பிரதி சபாநாயகரை கேட்டுள்ளார்.

இது சிறப்புரிமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தன்னை உரையாற்ற அனுமதிக்கவேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் உரையாற்றுவதற்கு என வழங்கப்பட்ட நேரத்தை  வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதன் போது குறுக்கிட்ட பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சிவசக்தி ஆனந்தனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன் பொது எதிரணி உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

எனினும் சுமந்திரன் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள பிரதிசபாநாயகர்    இந்த விவகாரம் குறித்து சபாநாயகருடன் பேசி இறுதிமுடிவையெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13