நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 144 பகுதிகளிலேயே 1200 இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இராணுவத்தின் 14, 58 மற்றும் 53 ஆவது படைப்பிரிவுகளை வெள்ள அனர்த பணிகளுக்காக சேவையில் அமர்த்தப்பட்டுள்ளன.
இதேவேளை களனி, உடுகம, பிட்டிகல, நாகொட, வெலிபென்ன, ஹொரவல, புலத்சிங்கள, பலிங்கநுவர, யட்டியாதோட்ட, புத்தளம் மற்றும் கௌனிமுல்ல ஆகிய பகுதிகளில்ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை கடந்த 24 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் உதவியுடன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளுக்காக படகுகள், இராணுவ கவச வாகனங்கள், இராணுவ இரும்பு குதிரை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை இராணுவத்தினர் நிறைவேற்றி வருவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM