அரவிந்த டி சில்வாவை தலைவராகவும் குமார் சங்கக்கார மற்றும் களுவித்தாரன உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட புதிய தெரிவுக் குழு மீது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளளும் இருபது-20 அணியின் முன்னாள் தலைவருமான லசித் மாலிங்க கடுமையாக தாக்கியுள்ளார்.
உபாதை காரணமாக போட்டியில் களமிறங்க முடியாது எனவும் ஆசிய கிண்ணத் தொடரில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகவும் அணித் தலைவர் பதவியிலிருந்து மாலிங்க விலகினார்.
இதனையடுத்து உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைவராக நியமிக்கப்பட்டதோடு மாலிங்கவும் இடம்பெற்றிருந்தார்.
ஏற்கனவே இலங்கை அணி இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்று நியூசிலாந்துடன் பயிற்சி போட்டி ஒன்றிலும் மோதியிருந்தது.
இந்நிலையில் மாலிங்க நேற்றைய தினமே இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். கொல்கத்தா விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே மாலிங்க புதிய தெரிவுக்குழு மீது அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர்,
"எனக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக என்னை தெரிவு செய்ய வேண்டாம் என்று தெரிவுக்குழுவுக்கு கூறியிருந்தேன். ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாகவே நான் அறிவித்திருந்தேன். ஆனால் என்னைத் தெரிவு செய்தார்கள். எனது உடல் நிலையில் 70 வீதம் கூட முன்னேற்றம் இல்லை. எனினும் என்னை விளையாடுமாறு வற்புறுத்தினார்கள். எனக்கு விளையாட முடியாது என்றால் அதை விளங்கிகொள்ள வேண்டும். எனக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
கிரிக்கெட் உலகில் என்னதான் சாதனைகளை மேற்கொண்டிருந்தாலும் களத்தில் அணியின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாவிட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.
எனது காலில் ஏற்பட்ட உபாதை குணமாவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனினும் இன்னும் ஓரிருநாட்களில் எனது உடல் நிலையில் முன்னேற்றமடைந்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவேன். போட்டிக்கு முன்னதாக களப்பயிற்சியில் ஈடுபடும் போது உடல்நிலை மோசமாக இருந்தால் உடனடியாக இந்த தொடரில் இருந்து என்னை விலக்குமாறும் இளம் வீரர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்குமாறும் தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுப்பேன்.
32 வயதுடைய மாலிங்க சர்வதேச இருபது-20 அரங்கில் 31 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இருபது-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பறிய வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM