(எம்.நியூட்டன்)
தமிழிழ விடுதலைப் புலிகளின் குமரப்பா-புலேந்திரன் உள்ளட்டவர்களின் நினைவாக வல்வெட்டித்துறையில் தூபி அமைப்பதற்கு தடையுத்தரவு கோரி பொலிஸாரினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.
தமிழிழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரனின் உள்ளிட்டவர்களின் நினைவாக வல்வெட்டித்துறை தீருவிலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை புனரமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகர சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய கடந்த 5 ஆம் திகதி அடிக்கல் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பமொன்றை தொடர்ந்திருந்தனர். அதாவது இதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியே இவ்விண்ணப்பத்தை செய்திருந்த நிலையில் குறித்த நகர சபைத் தலைவரையும் நேற்று ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவித்ததற்கமைய நகரசபைத் தலைவரும் ஆஐராகியிருந்தார்.
இதன் போது சட்டத்திற்கு முரணாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலே இத் தூபி அமைக்கப்படுவதால் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென பொலிஸார் கோரியிருந்த நிலையில் அது சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே நடைபெறுவதாக சட்டத்தரணி சிறிகாந்தா மன்றில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்றையதினம் இதற்கான கட்டளையிடுவதற்காக நிதிவான் வழக்கை ஒத்தி வைத்திருந்தார் இதற்கமைய நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே பொலிஸாரினால் தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM