அம்பாறை சம்மாந்துறை பிரதான வீதி வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் மாடொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய இஸ்மாயில் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து அம்பாறையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதி வீதியின் அருகிலுள்ள கால்வாயினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM