அம்பாறை வரிப்பத்தான்சேனை பிரதேச கடையொன்றிலிருந்து மூதாட்டி ஒருவர் கொள்வனவு செய்த பச்சைப் பாக்கு ஒன்றினுள் மனித முகம் தென்பட்ட அதிசய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
இறக்காமம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை 1ஆம் பிரிவு ,அம்பாறை பிரதான வீதியில் வசித்துவரும் சீனித்தம்பி பாத்தும்மா எனும் 70 வயது மதிக்கத்தக்க வெற்றிலைபோடும் பழக்கமுடைய மூதாட்டி ஒருவர் தனது வீட்டுக்கு முன்பாகவுள்ள சில்லறைக்கடை ஒன்றில் பச்சைப் பாக்குகளை வாங்கி அதிலொன்றை வழமைபோல் வெற்றிலை போடுவதற்காக பாக்குவெட்டியால் நறுக்கியபோதே குறித்த பாக்கினுள் மனித முகம் தென்பட்டுள்ளது. இந்த அதிசய காட்சியை இப்பிரதேசத்திலுள்ள மக்கள் பலரும் வியப்புடன் குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM