மலையகப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புதிய கிராமங்களுக்கு மலையக முன்னோடிகளின் பெயர்களை வைத்து நாம் மலையகத்திற்காக உழைத்தவர்களையும் உழைப்பவர்களையும் கௌரவப்படுத்தி வருகிறோம்.
ஆனாலும் எதற்கெடுத்தாலும் தங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொண்டமான் என வால் வைத்துக்கொண்டு வரும் கூட்டம் அவர்களது குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் லஞ்சம் வாங்கி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் வாலை சுருட்டிக் கொண்டு பெயரை மறைத்துக்கொண்டுள்ளனர் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரலியா கந்தப்பளை கோரட்லோஜ் தோட்டத்தில் அமையப்பெற்ற “பாக்கியம் புரம்”, போட்சூட் தோட்டத்தில் “மோத்தாபுரம்” ஆகிய தனிவீட்திடுத்திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன், பாரளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாகாண சபை உறுப்பினர் ஆர்,ராஜாராம், சோ. ஶ்ரீதரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வி.புத்திரசிகாமணி பிரதேச உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM