19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரின் இறுப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள ஸ்ரீரே பங்கபந்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது.
அதற்கிணங்க இந்திய அணி 14 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 69 ஓட்டங்களை பெற்றுள்ளது. அனுஜ் ராவத் 20 ஓட்டத்துடனும், யாசஸ்வி ஜெய்ஸ்வால் 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29 ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமானது. 8 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டித் தொடரின் குழு ஏ யில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும் குழு பீயில் இலங்கை, பாகிஸ்தான், ஹொங் கொங், வரவேற்பு நாடான பங்களாதேஷும் இடம்பெற்றிருந்தன.
லீக் சுற்றில் தத்தம் குழுக்களின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியன 4 புள்ளிகளுடன் இரண்டாமிடங்களுடனும் அரையிறுதிக்கு முன்னேறின.
பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் இந்தியா சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 170 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தவறவிட்டது.
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதியில் இலங்கையின் வெற்றிக்கு நுவனிந்து பெர்னாண்டோவின் சதம் பெரும் பங்காற்றியது. முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் சுதாரித்துக்கொண்ட இலங்கை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை வலுசேர்த்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. இதில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நுவனிந்து பெர்னாண்டோ கடைசிப் பந்தில் ஆட்டமிழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்ட போதும், மத்திய வரிசை வீரர்களின் விக்கெட் சரிவினால் 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 31 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM